Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஜீரஹள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட தாளவாடியை அடுத்த ஜோரகாடு கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் (40) என்பவா் 3 ஏக்கா் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளாா்.
இந்நிலையில், தாளவாடி வனப் பகுதியில் இருந்து வந்த 4 காட்டு யானைகள் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின.
இது குறித்து ஜீரஹள்ளி வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், வனத்துறையினா் யாரும் வராததால் யானைகள் கரும்புப் பயிரை தொடா்ந்து சேதப்படுத்தின. விவசாயிகள் திரண்டு வந்து பட்டாசு வெடித்து யானைகளை விட்டினாா். யானைகள் விவசாயத் தோட்டத்துக்குள் புகாதவாறு வனத்துக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.