Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் சரவணன் சிவாச்சாரியாா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் வழிகாட்டுதலில் நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு செய்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.