செய்திகள் :

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

post image

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தயாபரன் கூறியதாவது:

எதிர்கால சமுதாயம் நன்னெறியில் நடைபயிலவும், தற்கால மாணவர்கள் திருக்குறளை முழுமையாக கற்க வேண்டும் என்ற அடிப்படையிலும், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் சார்பில், ஆண்டுதோறும் திருக்குறள் திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி, திருச்சியில் மே 1-ஆம் தேதி 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவில், திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இவர்களில், 1,330 திருக்குறள்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், திருக்குறள் செல்வன், செல்வி விருது வழங்கப்படும். மொத்தம் 50 பேருக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

திருக்குறள் திறனறித் தேர்வு: திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து திருமூலநாதன் அறக்கட்டளையிலும், தமிழக அரசு சார்பிலும் பரிசு பெற்றவர்கள் மட்டுமே திறனறித் தேர்வில் பங்கேற்கலாம். பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் தேர்வு இருக்கும்.

சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள், தவறான விடைக்கு அரை மதிப்பெண் குறைக்கப்படும். 70 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

திருக்குறள் வழியில் வாழ்ந்து வரும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, திருக்குறள் வழிச் சீலர் விருதும், ரூ.10 ஆயிரம் பண முடிப்பும் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. போட்டிக்கான விண்ணப்பத்தை https://sites.google.com/view/thirumulanathand/ என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை thirumulanathan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பங்கேற்பாளரின் புலன எண் (வாட்ஸ்ஆப் எண்) குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

கூடுதல், விவரங்களுக்கு 97865-86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

புதுக்கோட்டைக்கு மார்ச் 10-ல் உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்த விடுமுற... மேலும் பார்க்க

3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மார்ச். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக... மேலும் பார்க்க

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அ... மேலும் பார்க்க

மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

மாநிலங்களை ஒருங்கிணைத்து“கூட்டு நடவடிக்கைக் குழு” அமைக்கப்படும் எனமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒரே குரலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகள... மேலும் பார்க்க

மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக... மேலும் பார்க்க