செய்திகள் :

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

post image

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மீரா ஜாஸ்மின் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால் இரவு வரை மீரா ஜாஸ்மின் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

meera jasmin
meera jasmin

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், மீரா ஜாஸ்மினின் செல்போன் டவரை வைத்து அவரது இருப்பிடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள சனமங்கலம் பகுதியில் இருக்கும் காப்புக் காடு பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அந்தக் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கண்டனர். அந்தப் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அவர்களின் முதல்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து, உடலை அங்கு எடுத்து வந்து அவரது உடலை எரித்திருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீரா ஜாஸ்மினின் உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த சனமங்கலம்
சம்பவம் நடந்த சனமங்கலம்

அதோடு, அவரைக் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்டர்வியூக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற பெண் காப்புக் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41... மேலும் பார்க்க

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.அது போன்று புனே அரு... மேலும் பார்க்க

திருச்சி சிறையில் விசாரணைக் கைதி மர்ம மரணம்; மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால் மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயர் ... மேலும் பார்க்க

சிவகாசி: அரசு ஒப்பந்த பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி; போலி பி.டி.ஓ கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டியைச் சேர்ந்த கண்ணன் (51) அச்சகம், டிசைனிங் மற்றும் கிரானைட் அறுக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அந்நிறுவனத்தில் பேராபட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் பொறிய... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ... மேலும் பார்க்க

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க