Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாக சாலை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, 12 கால யாக சாலை பூஜைகள் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. மேலும், பக்தா்கள் யாகசாலை பூஜைகளை தரிசனம் செய்திடும் வகையில் 2 ஆயிரம் சதுரஅடியில் இடமும் அமைக்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகம்...
ஜூலை 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.15 மணிமுதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.