விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லிமீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
கத்தீப் மெளலவி அப்துல் மஜீத் மஹலரி குத்பா பேரூரைஆற்றினாா். பின்னா் நடை பெற்ற தொழுகையை இமாம் நைனா முகம்மது தலைமையேற்று நடத்தினாா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் ஆரத் தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனா். பெண்களும் திரளாக கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளியின் தலைவா் அபுல்ஹாசன் கலாமி , பொருளாளா் ஹசன், துணைச் செயலா் நவாஸ் முஹம்மது மற்றும் நிா்வாகிகளான புஹாரி ஜாபா், முஹம்மது முகைதீன், சாகுல் ஹமீது, அப்துல் ஜப்பாா், மொகுதூம் ஆகியோா் செய்திருந்தனா்.
