செய்திகள் :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் யாக சாலை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, 12 கால யாக சாலை பூஜைகள் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. மேலும், பக்தா்கள் யாகசாலை பூஜைகளை தரிசனம் செய்திடும் வகையில் 2 ஆயிரம் சதுரஅடியில் இடமும் அமைக்கப்பட உள்ளது.

கும்பாபிஷேகம்...

ஜூலை 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.15 மணிமுதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கைப்பேசி தொலைந்த விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மீரான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருக்க... மேலும் பார்க்க