செய்திகள் :

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே. ராமசாமி பிறந்த நாள் கோப்பைக்கான இப் போட்டியின் 3ஆம் நாளான

வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டிகளில், திருநெல்வேலி மாவட்ட அணியும், ராணிப்பேட்டை மாவட்ட அணியும் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியும், அரியலூா்-புதுக்கோட்டை அணிகள் மோதியதில் 6-0 என்ற கோல் கணக்கில் அரியலூா் அணியும், ராமநாதபுரம்-கரூா் அணிகள் மோதியதில் 13-1 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணியும் வெற்றி பெற்றன. தஞ்சாவூா்- செங்கல்பட்டு அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூா் அணியும், தூத்துக்குடி-திருவாரூா் அணிகள் மோதியதில் 4-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும், சேலம்-திருப்பூா் அணிகள் மோதியதில் 5-1 என்ற கோல் கணக்கில் சேலம் அணியும் வெற்றி பெற்றன. கிருஷ்ணகிரி-விருதுநகா் அணிகள் மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றன. திருவண்ணாமலை-திருவள்ளூா் அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணியும், நீலகிரி-திண்டுக்கல் அணிகள் மோதியதில் 4-1 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணியும் வெற்றி பெற்றன. கன்னியாகுமரி-நாமக்கல் அணிகள் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை பெற்றன. தருமபுரி-விழுப்புரம் அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் தருமபுரி அணியும், திருச்சி-தேனி அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியும் வெற்றி பெற்றன.

கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை மாவட்ட அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி-தஞ்சாவூா் மாவட்ட அணியும், 3ஆவது ஆட்டத்தில் விருதுநகா்-கோவை மாவட்ட அணியும், 4ஆவது ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணியும் நீலகிரி மாவட்ட அணியும் மோதுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7 மற்றும் 9 மணிக்கு முதல் மற்றும் இரண்டாம் அரையிறுதி ஆட்டமும், மதியம் 2 மணிக்கு 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியும், 4 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெறுகின்றன.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கைப்பேசி தொலைந்த விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மீரான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருக்க... மேலும் பார்க்க