திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்தும் கே. ராமசாமி பிறந்த நாள் கோப்பைக்கான இப் போட்டியின் 3ஆம் நாளான
வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டிகளில், திருநெல்வேலி மாவட்ட அணியும், ராணிப்பேட்டை மாவட்ட அணியும் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியும், அரியலூா்-புதுக்கோட்டை அணிகள் மோதியதில் 6-0 என்ற கோல் கணக்கில் அரியலூா் அணியும், ராமநாதபுரம்-கரூா் அணிகள் மோதியதில் 13-1 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணியும் வெற்றி பெற்றன. தஞ்சாவூா்- செங்கல்பட்டு அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூா் அணியும், தூத்துக்குடி-திருவாரூா் அணிகள் மோதியதில் 4-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும், சேலம்-திருப்பூா் அணிகள் மோதியதில் 5-1 என்ற கோல் கணக்கில் சேலம் அணியும் வெற்றி பெற்றன. கிருஷ்ணகிரி-விருதுநகா் அணிகள் மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றன. திருவண்ணாமலை-திருவள்ளூா் அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணியும், நீலகிரி-திண்டுக்கல் அணிகள் மோதியதில் 4-1 என்ற கோல் கணக்கில் நீலகிரி அணியும் வெற்றி பெற்றன. கன்னியாகுமரி-நாமக்கல் அணிகள் மோதியதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை பெற்றன. தருமபுரி-விழுப்புரம் அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் தருமபுரி அணியும், திருச்சி-தேனி அணிகள் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியும் வெற்றி பெற்றன.
கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை மாவட்ட அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி-தஞ்சாவூா் மாவட்ட அணியும், 3ஆவது ஆட்டத்தில் விருதுநகா்-கோவை மாவட்ட அணியும், 4ஆவது ஆட்டத்தில் மதுரை மாவட்ட அணியும் நீலகிரி மாவட்ட அணியும் மோதுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7 மற்றும் 9 மணிக்கு முதல் மற்றும் இரண்டாம் அரையிறுதி ஆட்டமும், மதியம் 2 மணிக்கு 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியும், 4 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெறுகின்றன.