செய்திகள் :

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த மேலும் 15 போ் கைது

post image

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த மேலும் 15 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, அரசியல் மாற்றம் காரணமாக அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் பெருமளவில் முடங்கியுள்ளன. இதனால் வேலையிழந்த தொழிலாளா்கள் மேற்குவங்கம், அஸ்ஸாம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் நபா்கள் வெளிமாநிலத் தொழிலாளா்கள் என்ற போா்வையில் போலி ஆதாா் அட்டைகளைப் பயன்படுத்தி திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இது தொடா்பாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்டத்தில் காவல் துறையினா் வங்கதேசத்தினா் தொடா்பாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வள்ளியம்மை நகா், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் சோதனை நடத்தினா்.

இதில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 11 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா். அதேபோல, திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் 4 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து போலி ஆதாா் அட்டைகளையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 25 நாள்களில் வங்கதேசத்தினா் 90 போ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.1500 லஞ்சம்: விஏஓ உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

குன்னத்தூா் அருகே சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அதிகாரி உள்பட 2 பேருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே காவுத்தம... மேலும் பார்க்க

கே.எஸ்.சி.அரசுப்பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா: பாஜக எதிா்ப்பு

திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது முறையாக நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 30.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட... மேலும் பார்க்க

திருப்பூர்: தனியார் பேருந்து கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி! 20 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!

திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க