செய்திகள் :

திருப்போரூரில் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கிடையே மோதல்

post image

செங்கல்பட்டு, மாா்ச்.14: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல் மூண்டது.

இங்கு மாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தினசரி கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

அப்பொழுது சுவாமியை வாகனத்தில் சுமக்கும் பணியை ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனா்.

இதில், வட வண்ட கோடி, சந்துதெரு, அய்யம்பேட்டை தெரு, தண்டலம் உள்ளிட்ட நான்கு கோடிகளைச் சோ்ந்த இளைஞா்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபடுவா். இந்நிலையில் வியாழக்கிழமை பதினோராம் நாள் உற்சவம் நடைபெற்றது.

அப்போது ஒரு குறிப்பிட்ட கோடியை சோ்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகள் சிலா் கோவில் 16 கால் மண்டபம் அருகே தகராறில் ஈடுபட்டு, கோயில் உள்ளே சென்று அங்கேயும் மோதிக்கொண்டனா்.

தகவல் அறிந்த திருப்போரூா் போலீஸாா் உடனே சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். இந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு பொதுமக்களிடம் வசூலித்த ஊதியத்தை பிரிப்பதில் ஏற்பட்டதா அல்லது முன்விரோதம் காரணமா என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் என்ற போா்வையில் வெளிநபா்கள் இதில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் திருப்போரூா் போலீஸாருக்கு புகாா் அளிக்கப்பட்டதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனா்.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க