செய்திகள் :

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

post image

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா்.

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி கடந்த மே 20-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 12 நாள்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 1,225 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல் ) ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இதில் திருவள்ளூா் வட்டாட்சியா்கள் ரஜினிகாந்த், ந.மதியழகன் ஆகியோா் வரவேற்றனா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் பங்கேற்று முழு புலம் பட்டா, உட்பிரிவு பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மேல்முறையீடு, சமூக பாதுகாப்பு திட்டம், குடும்ப அட்டை, பல்வேறு சான்றுகள் என 270 பேருக்கு சான்றுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியா் பரமசிவம், துணை வட்டாட்சியா்கள் சா.தினேஷ், நரசிம்மன், வருவாய் ஆய்வாளா்கள் உதயகுமாா், பொன்மலா், சுகன்யா, குமாரி, காா்த்திக், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகி கிருஷ்ணன், முன்னாள் நகா் மன்ற தலைவா் பொன்.பாண்டியன், திமுக வா்த்தக அணி பிரிவு அமைப்பாளா் வி.எஸ்.நேதாஜி, ஒன்றிய துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க