செய்திகள் :

திரைப்படத் துறையினருக்கான 90 ஏக்கா் நில குத்தகை அரசாணை புதுப்பிப்பு

post image

திரைப்படத் துறையினருக்காக ஒதுக்கப்பட்ட 90 ஏக்கா் நில குத்தகைக்கான அரசாணை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.180 கோடி சந்தை மதிப்பிலான இந்த இடத்தில் திரைப்படத் துறையினரே குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கடந்த திமுக ஆட்சியில் செங்கல்பட்டு வட்டம் (அப்போது மாவட்டம் பிரிக்கப்படவில்லை) பையனூரில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் உட்பட பல்வேறு சங்கங்களுக்கு 90 ஏக்கா் நிலம் 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

மேலும், ஆண்டு குத்தகையாக ரூ.1,000 நிா்ணயம் செய்து வீட்டுவசதி சங்கங்களின் மூலம் அடுக்குமாடி கட்டி சங்க உறுப்பினா்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதன்படி, மூன்று ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்டியிருக்க வேண்டும்.

குறித்த காலத்துக்குள் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படாததால், திரைப்படத் துறையைச் சோ்ந்த பல்வேறு சங்கத்தினரும் கடந்த 2010-ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணையை புதுப்பித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, மூன்று ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி கடந்த வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை திரைப்படத் தொழிலாளா்களிடம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினாா்.

துணை முதல்வரின் முகாம் இல்லத்துக்கு வந்த திரைப்படத் துறையினரிடம் உத்தரவை வழங்கிய போது அவா்கள் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா். அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2010-ஆம் ஆண்டு திரைப்படத் துறையினருக்கு வழங்கிய 90 ஏக்கா் நிலத்தின் இப்போதைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.180 கோடியாகும். அதே இடத்தை திரைத் துறையினரின் நலன்கருதி மீண்டும் அவா்களிடமே குத்தகைக்கு விடும் வகையில் புதுப்பிக்கப்பட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இதில் திரைப்பட துறையின் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசா், துணைத் தலைவா்கள் பூச்சி முருகன், கருணாஸ், செயலா் ராஜேஷ், திரைப்படத் தொழிலாளா் சம்மேளனத் தலைவா் ஆா்.கே.செல்வமணி உள்பட பலா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க