செய்திகள் :

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

post image

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து 2015 ஆம் ஆண்டு பாஜக தில்லி முதல்வர் வேட்பாளராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசியதாவது:

இது மாற்றத்திற்கான, மறுசீரமைப்புக்கான மக்கள் தீர்ப்பு. தில்லி சீரழிந்து, வீழ்ச்சியடைந்த நிலையில் தில்லி முழுவதும் மறுசீரமைப்பை நோக்கி காத்திருந்த மக்கள், இப்படியொரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளனர். தூய்மை அபியான் மற்றும் பிற மத்திய அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டன, ஆனால் அவை தில்லியில் மட்டும் நிறுத்தப்பட்டது ஏன்? தில்லி மக்களின் இந்த தீர்ப்பு ஒரு மறுசீரமைப்புக்கானது என்று நான் நம்புகிறேன், மேலும் இது அமையவிருக்கும் அரசாங்கத்துக்கான ஒரு பெரிய பொறுப்பு," என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க | ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

மேலும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுக்கான நேரம் முடிந்துவிட்டது என்றும், இப்போது நமது கவனம் எல்லாம் நிர்வாகம் மற்றும் தலைநகர் வளர்ச்சியில் இருக்க வேண்டும். மக்கள் முன்னேற்றம், தூய்மை, குடியிருப்பு வசதிகள் மற்றும் நம்பிக்கையான அரசாங்கத்தை விரும்புகிறார்கள். இதனால் தில்லி இனி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறும் என்றும் கூறினார்.

பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தூய்மை போன்ற முக்கிய பிரச்னைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரை பேடி, "நான் பழைய தில்லியில் வசிக்கிறேன். தில்லியை விட்டு வெளியேறிவிடலாம் என்றெல்லாம் உணர்ந்தேன்." ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை அடுத்து "இப்போது நாங்கள் தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம், அமைய இருக்கும் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் அது நடக்கும்." என்று அவர் மேலும் கூறினார்.

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை (பிப்.10) தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்றஇறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்க... மேலும் பார்க்க

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

இன்று லேசான பனிமூட்டம் நிலவும்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு

நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்... மேலும் பார்க்க

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.கோமலாஹரி பி... மேலும் பார்க்க