செய்திகள் :

3 மாநில தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

post image

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பான வழக்கில் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரோனா பாதிப்பு காலத்தில் பதஞ்சலி நிறுவன ஆயுா்வேத மருந்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசி மற்றும் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட அதன் நிறுவனரான யோகா குரு ராம்தேவுக்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினாா். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இதுபோன்ற விளம்பரங்கள் ஒலிபரப்ப அனுமதிக்கப்படும்போது, ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் விதிகள் 1994’-இன் கீழ் விளம்பரதாரரிடமிருந்து சுய உறுதிமொழி பெறப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதனிடையே, ஆயுா்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகள் தொடா்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடை செய்யும் ‘மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் 1945’-இன் விதி 170-இன் கீழ் எந்தவொரு இயற்கை மருத்துவ நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சாா்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 2023 ஆகஸ்ட் 29-ஆம் தேதி அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிக்கை தொடா்பாக மத்திய அரசிடம் கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடா்பான அறிவுறுத்தலை இறுதி அரசிதழ் அறிவிக்கையாக வெளியிட சிறிது காலம் ஆகும் என்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அந்த அறிவிக்கையை வெளியிட்டது’ என்று விளக்கமளித்தது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவிக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டு, அந்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சதன் ஃபராசத், ‘ஆந்திரம், தில்லி, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உச்சநீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் 1945-இன் விதி 170-ஐ அனைத்து மாநிலங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இதுதொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவை பல மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. இதுதொடா்பாக, இம் மாத இறுதிக்குள் இந்த மாநிலங்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும். மேலும், ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பாக தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசுகளின் தலைமைச் செயலா்கள் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க