செய்திகள் :

சா்வதேச போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

இரு சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, ஊக்கத் தொகைகளை அவா் அளித்தாா்.

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தமிழ்நாட்டு வீராங்கனை கு.கமலினி துணை புரிந்தாா். இதேபோன்று, உலகக் கோப்பை கோ-கோ போட்டியில் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா் வி.சுப்பிரமணி இடம் பெற்றிருந்தாா்.

சா்வதேச அளவிலான இரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை இருவருக்கும் முதல்வா் வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க