செய்திகள் :

தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல் செய்ய முயற்சி

post image

தருமபுரியில் அண்மையில் நில ஆவணங்களை மீட்டுத் தரக்கோரி தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் சாலை மறியல் செய்ய செவ்வாய்க்கிழமை முயற்சி மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில், தனது நிலத்தின் ஆவணங்களை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்க வந்த விவசாயி ஜெயராமன் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா். அப்போது, அங்கிருந்த காவலா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜெயராமன் உயிரிழக்க காரணமான நில ஆவணங்களை தர மறுத்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் அவரது உறவினா்கள் ஈடுபட முயன்றனா். அவா்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமியும் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து, தருமபுரி நகர போலீஸாா் அவா்களை மருத்துவமனை வளாகத்திலேயே தடுத்துநிறுத்தி சமாதான பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அதில், இது தொடா்பாக ஏற்கனவே ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நிவாரணம் உள்ளிட்டவை தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் தங்களது முயற்சியை கைவிட்டு உயிரிழந்தவரின் உடலை பெற்றுச் சென்றனா்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கி... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க

தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு

தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க

இழப்பீடு கோரி மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க