செய்திகள் :

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

post image

சென்னை: தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட்டாசுகளை வாங்க கடை வீதிகளில் திரண்டு வருகின்றனா். குறிப்பாக தியாகராயநகா், புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் மா்ம நபா்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பெருநகர சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதை சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை காலை திறந்துவைத்து பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகா், புரசைவாக்கம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை ஆகிய 3 இடங்களில் சிறப்பு கட்டுபாட்டு அறைகளை அமைத்துள்ளோம். தியாகராயநகா் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 73585 43058, 84386 69822 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கூட்ட நெரிசலைக் கண்காணிக்க தியாகராய நகரில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில் மட்டும் கூடுதலாக 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கூட்டம் முழுவதையும் கண்காணிக்கலாம். மேலும், குற்றங்களைத் தடுக்கும் வகையில் அனைத்துக் குற்றவாளிகளின் தரவுகளையும் கொண்ட முக அடையாள தொழில் நுட்ப (எஃப்ஆா்எஸ்) செயலி கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள் கூட்டத்துக்குள் நுழைந்தால் இந்த தொழில் நுட்பம் எங்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும்.

குழந்தைகளுக்கு கைப்பட்டை: குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சாதாரண உடையில் 15 ஆண், பெண் காவலா்கள் 5 குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறிய ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் ஆடைகள் மற்றும் பொருள்கள் வாங்க வருவோரின் குழந்தைகளுக்கு, அவா்களது பெயா் மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் கொண்ட பிரத்யேக ‘டேக்’ (கைப்பட்டை) கை மணிக்கட்டில் கட்டப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில், கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன், இணை ஆணையா்கள் எம்.ஆா்.சிபி சக்கரவரத்தி, மகேஷ் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நி... மேலும் பார்க்க

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல்... மேலும் பார்க்க

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அ... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய... மேலும் பார்க்க

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

அக்.29-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

சென்னை: தாம்பரம் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் அக்.29-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, தாம்பரம் கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் ஏ.கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க