செய்திகள் :

தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை

post image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேரக் கட்டுப்பாடு உள்ளது.

எனவே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

பட்டாசு கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டக்கூடாது எனவும், தனியாக சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம்  ஒப்படைக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை என்ற பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.

பட்டாசு வெடிக்கும்போது செய்ய வேண்டியவை (Do's)

  • அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும்.

  • பட்டாசுகளை எப்போதும் மூடிய கொள்கலனில் (Closed Container) பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும்.

  • திறந்த வெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றியுள்ள பகுதிகளில் எரியக்கூடிய அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • பட்டாசுகளைக் கொளுத்தும்போது பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்கவும்.

  • முதலுதவிக்காக, தீக்காயங்களுக்கான மருந்துகள், ஒரு வாளி நிறையத் தண்ணீர் மற்றும் தீயணைப்புக் கருவிகளை (Fire Extinguishers) கையில் தயாராக வைத்திருங்கள்.

  • தீப்பிடிப்பதைத் தவிர்க்க, பருத்தி ஆடைகளை (Cotton Clothes) அணிய வேண்டும்.

  • உங்கள் குழந்தை பட்டாசு வெடிக்கும்போது, அது உங்கள் மேற்பார்வையின் கீழ் நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்கவும்.

தீபாவளி
தீபாவளி
  • செவிப்பறையின் பாதிப்பைத் தவிர்க்க, காதுகளில் பஞ்சு அடைப்பான்களைப் (Cotton Plugs) பயன்படுத்தவும்.

  • உங்கள் கூரையின் மீது (Roof Top) இருக்கும் எரியக்கூடிய பொருட்களை அகற்ற மறக்காதீர்கள்.

  • பட்டாசு கொளுத்தும்போது காலணிகளை (Footwear) அணிய வேண்டும்.

  • அவசரநிலை ஏற்பட்டால், 108-ஐ அழையுங்கள்.

  • பட்டாசுக் கழிவுகளைச் சேகரித்து, தனியாக ஒரு சணல் பையில் (Gunny Bag) வைத்து, சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடாதவை (Don'ts)

  • கையிலேயே வைத்துக்கொண்டு பட்டாசு கொளுத்துவதைத் தவிர்க்கவும்.

  • எரியும் மெழுகுவர்த்திகளுக்கு அருகில் பட்டாசுகளை விட்டுச் செல்லாதீர்கள்.

  • மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கவே கூடாது.

  • பாதி எரிந்த பட்டாசுகளைத் தூக்கி எறியாதீர்கள்; அவை தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தலாம்.

தீபாவளி கொண்டாட்டங்கள்
தீபாவளி கொண்டாட்டங்கள்
  • எந்தவொரு வாகனத்திற்கு அருகிலும் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்கவும்.

  • பட்டாசு வெடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அதைக் கிளறுவதையோ (tampering) அல்லது சோதிப்பதையோ தவிர்க்கவும்.

  • பட்டாசுகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவிலும் (Decibel) மட்டுமே வெடிக்கப்பட வேண்டும்.

  • பட்டாசுக் கழிவுகளை வீட்டில் உள்ள ஈரம் அல்லது உலர்ந்த கழிவுகளுடன் கலக்கக் கூடாது.

  • சென்னை மாநகராட்சி (GCC) பராமரிக்கும் கழிவுக் கொள்கலன்களில் (Compactor Bins) பட்டாசுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள்!

எனக் குறிப்பிட்டிருக்கிறது.

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்த... மேலும் பார்க்க

டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?

மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் ... மேலும் பார்க்க

Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்... மேலும் பார்க்க

"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் வி... மேலும் பார்க்க