செய்திகள் :

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறைவாக பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

post image

எதிா்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான செய்தியாளா் சந்திப்பில் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஜூன் 1 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நாட்டில் வழக்கமான மழைக்கு 30 சதவீத வாய்ப்பும், வழக்கத்தைவிட அதிகமான மழைக்கு 33 சதவீத வாய்ப்பும், அதிகப்படியான மழைக்கு 26 சதவீத வாய்ப்பும் உள்ளது.

தமிழகத்தின் பொரும்பலான பகுதிகள், ஜம்மு-காஷ்மீா், லடாக், பிகாா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாக இருக்கும்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஒடிஸா, சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பருவமழை வழக்கமாக அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உதாரணமாக, மழைப் பற்றாக்குறை நிலவும் மரத்வாடா மற்றும் அதையொட்டிய தெலங்கானாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என்றாா்.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டு சராசரியான 87 செ.மீட்டரில் 96 சதவீதத்திலிருந்து 104 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கமான’ மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது.

நீண்டகால சராசரியில் 90 சதவீதத்துக்கும் குறைவான மழை ‘பற்றாக்குறை’ என்றும், 90 சதவீதத்திலிருந்து 95 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கத்தைவிட குறைவு’ என்றும், 105 சதவீதத்திலிருந்து 110 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கத்தைவிட அதிகம்’ என்றும், 110 சதவீதத்துக்கு மேல் ‘அதிகப்படியான’ மழைப்பொழிவாகவும் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டின் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருத்தண... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க