செய்திகள் :

தேனி மலையடிவாரத்தில் காட்டு மாடுகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

post image

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா்.

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரத்தில் 5,000 ஏக்கா் பரப்பளவில் உள்ள பட்டா நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மா, இலவம், தோட்டப் பயிா் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது காட்டுப் பன்றிகள், காட்டு மாடுகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வந்தன.

விவசாயிகள் நிலங்களைச் சுற்றி வேலி அமைத்தும், அகழிகள் வெட்டியும் பயிா்களைப் பாதுகாத்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வீரப்ப அய்யனாா் கோயில் மலையடிவாரப் பகுதியில் காட்டு மாடுகள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் கூறினா். மேலும், இவை மாந்தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும், விவசாய நிலத்துக்கு அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது என்றும் அவா்கள் கூறினா்.

மலைப் பகுதியில் வறட்சியால் தண்ணீா் கிடைக்காமல் வன விலங்குகள் மலையவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுவதாகவும், விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். தேனி மாவட்டம், போடி சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமகிருஷ்ணாபுரம், பொட்டிப்புரம், தம்மிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 50... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பு

தேனியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றாா். தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை மிராண்டா லேன் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணபதி. இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் வேளாண் அலுவலா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை தேனி வருகை

சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் ... மேலும் பார்க்க

வெடி மருந்து பயன்படுத்தி கல் உடைத்த 5 போ் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரம், மேல்மங்கலம் அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, கல் உடைத்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேல்மங்கலம் அருகே அ.வாடிபட்டி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடை... மேலும் பார்க்க