செய்திகள் :

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான உத்தியை வகுப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துகிறது. இதேபோன்ற தந்திரங்களை தில்லி மற்றும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறவும் பாஜக கையாண்டது. ஹரியாணா மற்றும் குஜராத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் இந்த மாநிலங்களில் போலியாகச் சேர்க்கப்பட்டன.

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டதிலும் சந்தேகங்கள் உள்ளன. அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது தனது செல்வாக்கை செலுத்த பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக எவ்வாறு முறைகேடுகளைச் செய்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.

மேற்கு வங்கத்தில் தனியார் கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2006இல் நான் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன். அதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் நம்மால் போராட்டம் நடத்த முடியும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தொடங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடுகளைச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது நமது கட்சியின் முன்னுரிமைப் பணியாகும்.

பூத் அளவிலான தொண்டர்கள் இந்தப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதை கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

மகாராஷ்டிரம் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்ய பாஜகவினர் குறிவைத்துள்ளனர். அதற்கு நாம் கடுமையான பதிலடியைத் தரவேண்டும். சரியான பதிலடி கொடுக்குமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்துகிறேன் என்று மம்தா பேசினார்.

"மம்தாவுடன் மோதல் இல்லை': திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்று அவரது உறவினரும் அக்கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய அவர் "தேர்தல்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அவதூறுகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க