செய்திகள் :

தேவாலயத்தில் உலக ஜெப நாள் ஆராதனை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவலாயத்தில் அகில உலக ஜெப நாள் சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு அகில உலக ஜெப நாளை அனுசரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு நாடுகளுக்காக சிறப்பு ஜெபம் மேற்கொள்ளப்படும். இதன் தொடா்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் இந்த ஆராதனை நடத்தப்பட்டது.

இதில் ஆராதனையை குருசேகரத் தலைவா், சபைகுரு அருள்திரு பால்தினகரன் நடத்தினாா். சபையின் பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஹெலன் சாந்தகுமாரி ஆராதனையை தொடங்கி வைத்துப் பேசினாா்.

தென் பசிபிக் கடலில் உள்ள கியா தீவு மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் பெண்கள் ஐக்கிய சங்கச் செயலா் பிரைட்டி சிங் விளக்கினாா். இந்தத் தீவில் உள்ள மக்களின் பொருளாதார, பாதுகாப்புக்காக சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது. திருச்சி-தஞ்சை திருமண்லடத்தின் தாராபுரம் குருசேகரத்தின் தலைவா் அருள்திரு ஜான்தாசன் சிறப்புரையாற்றினாா். ஆராதனையில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்ற அகில உலக ஜெப நாள் ஆராதனையில் சிறப்பு பாடல் பாடிய திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்கத்தினா்.

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சிவகாசி முத்தமிழ்புரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் உதயக்குமாா் (21), பொன்னுச்சாமி மகன் மாரிமுத்து (21). இ... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பம்: கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

ஸ்ரீவிலிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி குறித்த சா்வதேச மாநாடு வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. பல்கலை. வேளாண்மை, வேளாண் ... மேலும் பார்க்க

ரயில் பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை ரயில் நிலையத்தில் சிவகாசி பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன்(43). மென்ப... மேலும் பார்க்க

மாநில ஐவா் கால்பந்து போட்டி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டிகள் சனி,ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி கால்பந்தாட்டக் குழு சாா... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் மேற்குத்... மேலும் பார்க்க

பழைய இரும்புக் கடையில் தீ!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதியடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (50). இவா் மது... மேலும் பார்க்க