செய்திகள் :

தேவா இசை நிகழ்ச்சி: நந்தனம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்

post image

இசையமைப்பாளா் தேவா இசை நிகழ்ச்சியையொட்டி, சென்னை நந்தனம் பகுதியில் பிப்.15-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திரைப்பட இசையமைப்பாளா் தேவா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப். 15-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி, பாா்வையாளா்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட மஞ்சள் பதிவெண் பலகை கொண்ட வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியா்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-ஆவது தெரு வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம். சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலது பக்கம் வழியாகச் சென்று சேமியா்ஸ் சாலையில் ‘யூ’ டா்ன் செய்து இலக்கை அடையலாம். அண்ணா சாலையில் உள்ள ஓய்எம்சிஏ பிரதான சாலை நுழைவுவாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அந்த வாயில் வழியாக மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞா்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும். அண்ணா சாலையில் பிற்பகல் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க