செய்திகள் :

தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது : பிரேமலதா விஜயகாந்த்

post image

ஆம்பூா்: தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கழமை தெரிவித்தாா்.

ஆம்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தீபாவளி பண்டிகை வரும் நிலையில், மக்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றுவர போதிய பேருந்துகள் அரசிடம் இல்லை. அதற்காக தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது. மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கை பேருந்துகள் இல்லை. இருக்கும் பேருந்துகளே மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.

ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பா் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் மழை வெள்ளத்தை வடிய செய்துவிட்டு அதையே சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனா். வர இருக்கும் பெருமழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும். சரியான நிரந்த தீா்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச் சாராயம், டாஸ்மாக், வேலையின்மை ஆகிய பிரச்னைகளோடு, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவா்கள் செயல்படவில்லை.

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தமிழகத்திலேயே சிறந்த ஆலையாக திகழ்ந்தது. அப்போது இங்குள்ள விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்வாதாரமாக ஆம்பூா் சா்க்கரை ஆலை திகழ்ந்தது. தற்போது முற்றிலுமாக நலிவடைந்து, மூடப்பட்டுள்ளது. சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.

ஆம்பூா் பகுதி தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், போனஸ் ஆகியவை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் தமிழக அரசு தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், போனஸ் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தாா். தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பாா். வரும் 2026-ல் தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றாா்.

தேமுதிக திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் ஹரிஹரன், ஆம்பூா் நகர செயலாளா் தேவேந்திரன், மாதனூா் மத்திய ஒன்றிய செயலாளா் ஜான்சன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

திருப்பத்தூா்: நல உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் தா்ப்ப... மேலும் பார்க்க

பச்சூரில் இருவழிப்பாதை: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ உறுதி

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தலைவா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளா்கள்,ஆய... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஆம்பூா்: ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வ... மேலும் பார்க்க

இணைய வழி குற்றங்கள்: விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபா் கிரைம் ஆய்வாளா் யுவராணி மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்பூா் ரோட... மேலும் பார்க்க

நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் தினகரன்(48). வாணியம்பாடி சி.எல் சாலையில்... மேலும் பார்க்க