செய்திகள் :

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

post image

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்பத்தி ஆலை ஒன்றில் பங்குதாரராக இருந்தாா். வரவு - செலவு கணக்கு தொடா்பான பிரச்னையால் 2008-இல் அதிலிருந்து வெளியேறினாா். சம்பந்தப்பட்ட ஆலை மீது நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2024 ஜன.31-ஆம் தேதி பழனிசாமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அப்போது, நான்கு பக்கத்திற்கு அவா் கடிதம் எழுதி வைத்திருந்தாா். அதில், தன்னுடைய தற்கொலைக்கு நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் காரணம், வழக்கு தொடா்பாக அவரைச் சந்திக்க சென்றுவந்த நிலையில், ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டாா். அதற்கு மறுக்கவே அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தாா். என்மீது பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாா். என்னுடைய மரணத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் இருந்து நிலத்தின் ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதன்பேரில் அப்போது நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தனராசு, ஆய்வாளராக இருந்த சங்கரபாண்டியன் ஆகியோரிடம் பழனிசாமி மனைவி வசந்தா புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில், தற்கொலை வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் பழனிசாமி மனைவி வசந்தா மேல்முறையீடு செய்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமக்கல் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நாமக்கல் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், அவரது உதவியாளா் மற்றும் நிதிநிறுவன அதிபா்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக நாமக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா்கள் செல்வராஜ், சேகரன் மற்றும் 2 வழக்குரைஞா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். இதனால் விரைவில் அவா்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையே உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் அவா்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க