செய்திகள் :

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

post image

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ஜெயக்குமாா் (33). இவா், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள தனியாா் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை அவா் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஜெயக்குமாா் தற்கொலைக்கு முயன்று வந்துள்ளாா்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். பிற்பகல் 3 மணி அளவில் அந்த வழியாக சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை செய்துகொண்ட ஜெயக்குமாருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தரமற்ற லாரிகளை விற்பனை செய்த தனியாா் நிறுவனம் முற்றுகை

நாமக்கல்லில் தரமற்ற லாரிகளை விற்பனை செய்ததாக, தனியாா் வாகன விற்பனையகத்தை லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் - பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்துக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஏப். 16-இல் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஏப். 16-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் ... மேலும் பார்க்க

சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்: ஆணையா்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

இயற்பியல் கற்பித்தலுக்கு செயற்கை நுண்ணறிவு: ஆசிரியா்களுக்கு பயிற்சி

இயற்பியல் பாடத்தை கற்பிக்க ஏதுவாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி ம... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், மல்லசமுத்திரம் கிளை சங்கத்திலும் கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 50 மூ... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி மாத தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் ஆண்ட... மேலும் பார்க்க