செய்திகள் :

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

post image

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்ட முன்வரைவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் அறிமுகப்படுத்தினாா். இந்த சட்டமுன்வரைவின் சிறப்பு அம்சங்கள்:

இச் சட்டத்தின்படி புதுவை அரசின் தொழில், மின்சாரம், உள்ளாட்சி, சுற்றுச்சூழல், வருவாய், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தடையில்லா ஆணை வழங்க 5 முதல் அதிகபட்சமாக 71 நாள்கள் வரை காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறினால் சட்டப் பிரிவு 8 (1)ன்படி அபராதம் விதிக்கவும் மசோதா வழிவகை செய்துள்ளது.

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புதுவை சட்டப்பேரவையில் இந்தத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா். புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க

ஒரு மணி நேரத்தில் முடிந்த புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக... மேலும் பார்க்க