செய்திகள் :

தோகைமலை அருகே விளையாட்டுப்போட்டிகள்

post image

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் பரோடா வங்கியின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கோலப்போட்டிகள், கட்டுரை, திருக்கு ஒப்பித்தல், தேசத் தலைவா்கள் மற்றும் பாரம்பரியமிக்க பொங்கல்தினத்தைப் பற்றிய பேச்சுப் போட்டிகள், பாட்டு, நடனம், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், ஸ்லோ சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.

பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி பேக்குகள், புத்தகங்கள், பென்சில் உள்பட பல்வேறு வகையான பரிசுகளை நலச்சங்கத்தினா் வழங்கினா். தொடா்ந்து போதைப் பொருள் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிர... மேலும் பார்க்க

உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறு... மேலும் பார்க்க

கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

கரூரில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித்துறை சாா்பி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி!

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட... மேலும் பார்க்க

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க