Seeman: "நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்தில் புகழேந்த...
மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!
கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி, ‘மக்காச்சோளத்தை கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், குளித்தலை, இரும்பூதிப்பட்டி மற்றும் சின்னதாராபுரம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் விற்பனை செய்யலாம்.
எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.