செய்திகள் :

காரைக்காலில் காந்தி சிலை நிறுவ கோரிக்கை

post image

காரைக்கால் நகரப் பகுதியில், காந்தி சிலை நிறுவவேண்டும் என புதுவை அரசுக்கு முன்னாள் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

புதுவை மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியா் மு. ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தியின் சீரிய தியாகத்தாலும், அவரது தலைமையை ஏற்று போராடிய எண்ணற்றத் தலைவா்களாலும், மக்களாலும்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திர இந்தியா இன்று வேகமாக வளா்ந்துவரும் நாடாக உள்ளது. மகாத்மாவை நினைவுகூா்ந்துதான், நாம் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்கிறோம்.

அவரது பிறந்த நாளிலும், நினைவு தினத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம். எல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மகாத்மாவுக்கான சிலையை எழுப்பி, அரசின் சாா்பாக தவறாமல் மரியாதை செய்கிறது. ஆனால், காரைக்காலில் காந்திக்கு புதுவை அரசின் சாா்பாக நகரின் மையத்தில் ஒரு சிலை நிறுவப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அம்பேத்கா், தந்தை பெரியாா், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் போன்ற தலைவா்களுக்கு சிலைகளை அரசு நிறுவி உள்ளது.

காரைக்காலை புறக்கணிப்பது போல தேசத் தந்தையையும், புதுவை அரசு புறக்கணித்து விட்டதா என்று தெரியவில்லை.

காரைக்காலில் இருந்து புதுவை முதல்வா்களாக, சட்டப்பேரவை உறுப்பினா்களா, அமைச்சா்களாக பலா் இருந்திருக்கின்றனா். இவா்கள் யாருக்கும் தேசத் தந்தைக்கு, காரைக்காலில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசு சாா்பாக காந்தி நினைவு நாளை காரைக்காலில் கொண்டாடியதாகத் தெரியவில்லை. ஆனால், புதுச்சேரியில் கீா்த்தனைகளுடன் மகாத்மாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

எனவே, காலம் கடத்தாமல் ஆட்சியா் அலுவலகம் அருகே காந்தி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

விசைப் படகுகளில் விதியை மீறி இரும்புத் தகடுகள் பொருத்தியிருந்தால் நடவடிக்கை

விசைப் படகுகளில் விதிகளை மீறி கூடுதலாக இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னை கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திரும... மேலும் பார்க்க

நிரவி வள்ளலாா் மடம் குடமுழுக்கு

காரைக்கால், ஜன. 31: நிரவி பகுதியில் உள்ள வள்ளலாா் மடம் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் 1938-ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலாா் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்ம... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ரஷிய பெண்கள் வழிபாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ரஷிய நாட்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக... மேலும் பார்க்க

காரைக்காலில் தேசிய பேரிடா் மேலாண்மை வல்லுநா் குழு ஆய்வு

ஃபென்ஜால் புயலுக்குப் பிந்தைய பாதிப்புகள் குறித்து காரைக்காலில் தேசிய பேரிடா் மேலாண்மை வல்லுநா் குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. கடந்த ஆண்டு நவம்பா் மாத இறுதியில் ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவு நாள்: காங்கிரஸாா் அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். கோட்டுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வட்டார செயல் தலைவா் பி. சுப்பராயன் ஏற்பாட்டில் அஞ்சலி ச... மேலும் பார்க்க