செய்திகள் :

பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!

post image

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.

இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்வதால் வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

வழக்கமாக வார இறுதி நாள்கான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை செயல்படாது. திங்கள் - வெள்ளி வரையிலான வார நாள்களில் மட்டுமே செயல்படும்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக பங்குச் சந்தை செயல்படவுள்ளன.

இதற்கு முன்பு 2020, 2015 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுக்கும் வார இறுதி நாளையும் பொருட்படுத்தாது பங்குச் சந்தை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,707 கோடி

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கிய... மேலும் பார்க்க

பரோடா வங்கி நிகர லாபம் 6% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் ம... மேலும் பார்க்க

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!

புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.சமீபத்த... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிந்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.63 ஆக தொடங்கி, பி... மேலும் பார்க்க

மாருதியின் மேட் இன் இந்தியா 'ஜிம்னி' ஜப்பானில் விரைவில் அறிமுகம்!

புதுதில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கதவு மாடலான ஜிம்னி, ஜப்பானிய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது. குருகிராமை தளமாகக் கொண்ட ஆலையில் பிரத்தி... மேலும் பார்க்க