செய்திகள் :

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

post image

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் 2 வருடங்களுக்கு முன் 'மரக்கார் பிரியாணிக் கடை' என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும், அதற்குத் தமிழகம் முழுவதும் கிளை திறக்க உள்ளதாகவும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 239 பேர் தங்கள் பகுதியில் மரக்கார் பிரியாணி கடை கிளை திறப்பதற்காகக் கங்காதரனைத் தொடர்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து, பிரியாணிக் கடை கிளை அமைக்க உரிமம் வழங்குவதற்கு ஜி.எஸ்.டி. உட்பட ரூபாய் 1.28 லட்சம் மற்றும் பொருட்கள், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

இப்படி, தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரா உள்பட 4 மாநிலங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்டவர்கள் கங்காதரனிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன்மூலம் ரூ. 25 கோடி வரை கங்காதரன் வசூலித்துள்ளார். இந்த விஷயத்தில், இவருக்கு உடந்தையாக ப்ரவீன், ராம்குமார், தேவதாஸ், மரியநாயகம், சதீஷ்குமார் ஆகிய 5 பேர் செயல்பட்டுள்ளனர்.

போராட்டம்

தொடர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் கிளை கடை திறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளார். முதற்கட்டமாக, 21 கடைகளைத் திறந்துவைத்து வியாபாரம் தொடங்கியுள்ளார். ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அனைத்து கடைகளும் இழுத்து மூடப்பட்டது. அந்த 21 பேரைத் தவிர்த்து மற்ற நபர்களுக்கு இதுவரை மரக்கார்‌ பிரியாணிக் கடை கிளை திறப்பதற்கான‌ வேலைகள் எதையும் கங்காதரன் செய்யவில்லை. அதுபோல், பிரியாணிக் கடை அமைப்பதற்கு ஏஜென்சி விருப்பதாரர்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி வழங்கவில்லை.

தாங்கள் பண மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து கங்காதரனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்துகையில், 'தன்னை நீதிமன்ற வழக்கு மூலம் மட்டுமே விசாரணை செய்யவேண்டும்' எனக் கூறி ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 249 பேருக்கும் நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கங்காதரனால் பாதிக்கப்பட்டவர்கள், 4 மாநிலங்களிலிருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். ஆனால் கங்காதரன் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள், நீதிமன்ற உள் வாயில் அருகே, கங்காதரனைக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

நீதிமன்றம்

தொடர்ந்து நீதிமன்றத்துக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கங்காதரன் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும், கங்காதரன் உள்ளிட்ட 6 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" எனக் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிர... மேலும் பார்க்க

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டி... மேலும் பார்க்க

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் த... மேலும் பார்க்க

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' - காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்... மேலும் பார்க்க

"என் கார்மீது மாட்டை மோதவிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம்..." - இமான் அண்ணாச்சி பேட்டி

எப்போதும் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை சீரியஸ் ஆக்கியிருக்கிறது, சமீபத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவம். குடும்பத்துடன் காரில் சென்ற இமான் அண்ணாச்சி, சாலை விபத்திலிருந்து தப்ப... மேலும் பார்க்க

ரூ.18 லட்சம் கொள்ளை: திருடனுடன் சேர்ந்து மசாஜ் செய்த காவலர்கள்... வடிவேலு பட பாணியில் தப்பி ஓட்டம்!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் இருக்கும் சாராய கம்பெனிக்குள் நுழைந்த திருடர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இது தொடர்பாக ப... மேலும் பார்க்க