செய்திகள் :

ஈசிஆர் விவகாரம்: 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

post image

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து தேடினர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சந்துரு என்பவர் உள்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 இளைஞர்களிடமும் கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட பிறகு சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்று... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது... மேலும் பார்க்க

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்ற... மேலும் பார்க்க

தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரூ. 59 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு ... மேலும் பார்க்க

658 சிறப்பு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ... மேலும் பார்க்க