செய்திகள் :

காசியாபாத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து

post image

காசியாபாத்: காசியாபாத் அருகே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்ததால் லாரியில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிவாயு உருளைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் லாரியை நெருங்க முடியவில்லை.

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி தில்லி-வஜிராபாத் சாலை போபுரா சௌக் அருகே திடீரென தீப்பிடித்ததை அடுத்து லாரியில் இருந்து எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பயங்கர சத்தத்துடன் எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்த நிலையில், சுற்றுப்பகுதியில் இருந்த பதற்றத்துடன் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களால் தீப்பற்றி எரியும் லாரியை நெருங்க முடியவில்லை. எரிவாயு உருளைகள் வெடிக்கும் சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்பதாக தீயணைப்புத்துறை அதிகாரி ராகுல் குமார் கூறினார்.

லாரியில் 100-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள், காயங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு வீடு மற்றும் ஒரு கிடங்கு சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு கை, கால் முறிவு

ராசிபுரம்: தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் ராசிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போலீஸாரிடமிருந்து தப்பமுயன்ற இரு கொள்ளையர்களுக்கு கை, காலில் முறிவு ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்து ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ. 6.50 குறைந்து ரூ.1,953.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.கச்சா... மேலும் பார்க்க

பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!

பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜன.31) நடைபெற்றது. இந்தப்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடியில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது!

நேபாளத்தில் சட்டவிரோதமான கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடி ஆகியவற்றில் ஈடுபட்ட 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாள காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மக்க... மேலும் பார்க்க

அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்து தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட... மேலும் பார்க்க