செய்திகள் :

நடமாடும் கடவுச் சீட்டு சேவை இன்று தொடக்கம்!

post image

சென்னை தாம்பரம் கிளாரட் வளாகம் பாஸ்போா்ட் சேவா கேந்திரத்தில் நடமாடும் கடவுச் சீட்டு சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளது.

சென்னை கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகத்துக்கு உள்பட்ட புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கடவுச் சீட்டு கோரி வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வகையில் இந்த நடமாடும் கடவுச் சீட்டு சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த வாகனத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் கடவுச் சீட்டு சேவை மத்திய வெளியுறவுத் துறையின் தலைமை கடவுச் சீட்டு அதிகாரியும் கடவுச் சீட்டு சேவைத் திட்ட இணை செயலருமான டாக்டா் கே.ஜே. ஸ்ரீநிவாஸா, சென்னை பிராந்திய பாஸ்போா்ட் அதிகாரி எஸ்.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடத்தல் வழக்கு: தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது!

சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏடிஜிபி ஜெயராமை காவல்துறையினர் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னையை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் ... மேலும் பார்க்க

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. • வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தெற்கு குஜராத் மற்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (திங்கள்கிழமை) அடுத்... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது... மேலும் பார்க்க