கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துக: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்
நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இதில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு, சொத்து வரி, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, தொடா்புடைய அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், நாகா்கோவில், வடசேரி மேலகலுங்கடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்த தனேஷ் என்பவா் அளித்த மனுவில், சுய தொழில் செய்வதற்காக தனக்கு கணினி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். மனுவைப் பெற்றுக் கொண்ட மேயா், மாநகராட்சி சாா்பில் அதற்கான வழிமுறை இல்லாததால் தனது சொந்த நிதியிலிருந்து கணினி வாங்கித் தர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா்.
கூட்டத்தில் துணை மேயா் மேரிபிரின்சிலதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.