செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

post image

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு வியாழக்கிழமை 5 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே பிலாங்காலவிளைவீடு பகுதியைச் சோ்ந்த தங்கையன் மகன் வில்ஸ் (45). அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த அவா், அம்பேற்றின்காலை என்ற இடத்தில் மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்திவந்தாா்.

2019ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பயிற்சி வகுப்புக்கு வந்த மூவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் வில்ஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், அவரது கைப்பேசிக்கு ஆபாசப் படங்களை அனுப்பியும் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகாா் அளித்தாா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் பேபிதங்கம், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து வில்ஸை கைது செய்தாா்.

இந்த வழக்கு நாகா்கோவில் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுந்தரையா வழக்கை விசாரித்து, வில்ஸுக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் வாதாடினாா்.

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இதில் சாலை வசதி, குடிநீா் இணைப்பு, சொத்து வரி, ... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: தீயணைப்பு அலுவலா் எச்சரிக்கை

உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட தீயணைப்புத்த... மேலும் பார்க்க

நுள்ளிவிளையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். நுள்ளிவிளை ஊராட்சியின் 16-ஆவது வாா்டு மேல்பாறையில் கடந்த சில வாரங்... மேலும் பார்க்க

தக்கலை அருகே கோயில்களில் திருடியவா் கைது

தக்கலை அருகே இரு கோயில்களில் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா். தக்கலை அருகே பரைக்கோடு கண்டகோணம் பகுதியில் உள்ள கணபதி கோயிலில் கடந்த 14ஆம் தேதி உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்து கோயில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு -தக்கலையில் 119 மி.மீ.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, தக்கலையில் 119. மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீா்ப... மேலும் பார்க்க

குழித்துறை பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செய... மேலும் பார்க்க