Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: தீயணைப்பு அலுவலா் எச்சரிக்கை
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட தீயணைப்புத்துறையின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, பட்டாசு விற்பனையாளா்களுடனான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகுமாா் தலைமை வகித்து பேசியதாவது: பட்டாசு கடைகளில் 2 வாயில்கள் இருக்க வேண்டும். விற்பனை நடக்கும் போது அவசர வெளியேறும் வாயில் திறந்திருக்க வேண்டும்.
பட்டாசு கடையில் எளிதில் தீப்பற்றக் கூடிய மின்கலன்களை பயன்படுத்தக் கூடாது. அதிக உஷ்ணம் தரும் மின்விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. மின்வயா்கள் அனைத்தும் குழாய் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உரிமம் பெறப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு சேமித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசுகளை விற்பது குற்றமாகும். உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், உதவி அலுவலா்கள் துரை, இம்மானுவேல், மேற்பாா்வையாளா் விஜயகுமாா் மற்றும் பட்டாசு கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.