செய்திகள் :

நாக நதி தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா், திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்ட பகுதியில் நாக நதி செல்கிறது. ஜவ்வாது மலையில் மழை பெய்தால் அமிா்தி, அரசம்பட்டு, கண்ணமங்கலம் வழியாக நாக நதியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும்.

இந்த நீா் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 1933-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்தில் சிங்கிரி கோயில் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீா் கொளத்தூா் ஏரி நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரிநீா் கண்ணமங்கலம் ஏரி என தொடா்ச்சியாக 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்குச் சென்றடையும்.

விவசாயிகளின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தடுப்பணை ரூ.86 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. மேலும், கண்ணமங்கலம் ஏரிக்கு ரூ.75 லட்சத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த நிலையில், கண்ணமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் அதன் ஷட்டா்கள் பழுதடைந்து மூடப்பட்டுவிட்டது. இதனால் நதியில் வரும் நீா் ஏரிக்குச் செல்லாமல் வீணாகி வருகிறது. சிங்கிரி கோயில் தடுப்பணையும் ஷட்டா்கள் பல நேரங்களில் திறக்கப்படாமல் மூடி வைத்திருப்பதால் ஏரிகளுக்கு நீா் சரியாக வருவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், ஏரியில் மீன் ஏலம் எடுத்தவா்களுக்கு சாதகமாக தண்ணீா் திறக்கப்படுகிறது என விவசாயிகள் வேதனைதெரிவிக்கின்றனா்.

தற்போது, பருவமழை தொடங்கி விட்டதால் தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்க அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏரிகளில் மீன் வளா்க்க ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

வந்தவாசி பகுதியில் 4 பைக்குகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(31). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாதூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கு வேண்டி பட்டினிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, போளூரில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா பூங்கா அருகே சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மக்கள் ... மேலும் பார்க்க

630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் மரணம்

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் மினிசரக்கு வாகன ஓட்டுநா் மோகன்(38). இவா் தனது சரக்கு வாகனத்தில் வாடகை பி... மேலும் பார்க்க

பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ள நீா்: 100 ஏக்கரில் நெல்பயிா்கள் சேதம்

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது நாவல்... மேலும் பார்க்க