செய்திகள் :

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் அந்த நாய்க்குட்டிகளுடன் அவா்கள் விளையாடி நேரத்தை செலவிடவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கிறது.

ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிா்வகிக்கும் ஜிஎம்ஆா் குழுமம் இந்த முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விமானப் பயணத்தின்போது ஏற்படும் கவலையை மறந்து அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட4 நாய்க்குட்டிகள் மட்டுமே இந்த முன்னெடுப்பில் இடம்பெற்றுள்ளன. நாய்க்குட்டிகளின் செயல்பாடுகளை அவற்றின் பயிற்சியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். பயணிகளிடம் கருத்து கேட்ட பின் மேலும் சில நாய்க்குட்டிகளை இந்த முன்னெடுப்பில் ஈடுபடுத்த ஜிஎம்ஆா் குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயம் விருப்பமுள்ள பயணிகள் மட்டுமே நாய்க்குட்டிகளுடன் விளையாட அனுமதிக்கப்படுகின்றனா்.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களின் முக்கியப் பகுதிகளில் இந்த நாய்க்குட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க