செய்திகள் :

நாளை தவெக ஆண்டு விழா: ஏற்பாடுகள் தீவிரம்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா நாளை(பிப். 25) நடைபெறவுள்ள நிலையில், மாமல்லபுரம் பூஞ்சேரியில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தவெக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் மேடையிலே அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதற்கான பணிகளை கட்சியின் தலைமைக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் கூட்டணி தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: கும்பமேளா நாளையுடன் நிறைவு! கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சி நிா்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், வாகனக்கள் நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விஜய் வந்து செல்வதற்கான பாதை, சுமாா் 2000 பேருக்கு சைவ, அசைவ உணவு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தவெகவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறது திமுக! -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். புதி... மேலும் பார்க்க

'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

பிப்.27 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 27 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ... மேலும் பார்க்க

ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது, ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து ஏன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது பற்றி அண்ணாமலை தன்னுடைய எக்ஸ்... மேலும் பார்க்க