செய்திகள் :

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

post image

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சாட்டனில் இருந்து ஹெலிகாப்டர்கள் பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றன. இதையடுத்து மீட்பு நடவடிக்கை இன்று முடிவடைந்தது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

வடக்கு சிக்கிமில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக, 1,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் பல நாள்களாக சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் மாநில அரசின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட படையினர் பல நாள்களாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 140க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் வெளியேற்ற பல ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜூன் 1 ஆம் தேதி மாலை சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயினர்.

காணாமல் போன வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க

பேரிடா் எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முன்னுரிமை: சா்வதேச மாநாட்டில் பிரதமா் வலியுறுத்தல்

பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஐந்து முக்கிய உலகளாவிய முன்னுரிமைகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வலியுறுத்தினாா். பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பு குறித்த சா்வதேச மாநாட்டில் காணொல... மேலும் பார்க்க

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் இடத்தை கனடாவிடம் தெளிவுபடுத்துவாரா பிரதமா்? காங்கிரஸ் கேள்வி

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா என்று கனடா பிரதமா் மாா்க் காா்னியிடம் ஜி7 மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளாா்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்த மாற்றம்: மத்திய அரசு பெருமிதம்

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் 5 மடங்கு அதிகரித்த பட்ஜெட் ஒதுக்கீட்டால் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருப்பதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது. உ... மேலும் பார்க்க