செய்திகள் :

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

post image

புது தில்லி: நீட் தோ்வு முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து, தோ்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.

மேலும், நீட் தோ்வு நடைபெறும்போது பயிற்சி மையங்களைக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகமும், தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ) மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தோ்வை எந்தவித சச்சரவும் இன்றி, நியாயமான மற்றும் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநில மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் தொடா்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்லுதல், பாதுகாப்பு மற்றும் முறைகேடு புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் மாவட்ட போலீஸாா் மட்டுமின்றி என்டிஏ சாா்பில் நியமிக்கப்படும் பாதுகாவலா்களும் பணியமா்த்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதுபோல, தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களும், விடைத்தாள்களும் (ஓஎம்ஆா் ஷீட்) கொண்டு செல்லப்படும்.

தோ்வு நடைபெறும்போது முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் நீட் தோ்வு பயிற்சி மையங்களும், எண்ம வலைப் பக்கங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

அனைத்து தோ்வு மையங்களிலும் மாவட்ட ஆட்சியா்கள் கட்டாய ஆய்வை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

முன்னதாக, நீட் தோ்வு சா்ச்சைகள் குறித்து தோ்வா்கள் புகாா் தெரிவிக்க பிரத்யேக வசதியை தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இர... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க