செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

post image

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட 48 சுற்றுலாத் தலங்கள மூட அம்மாநில அரசு இன்று (ஏப்.29) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் மற்றும் எல்லையில் நிலவும் அச்சுறுத்தல் ஆகியவற்றினால் ஜம்மு - காஷ்மீரின் 8 மாவட்டங்களிலுள்ள யூஸ்மார்க், தொஸாமைதான், தூத்பத்ரி, அஹர்பால், கௌஸர்னாக், பங்குஸ், சூரிய கோயில், ஜாமியா மஸ்ஜித், புத்த மடம், மர்கூட் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் ஆகிய 48 இடங்கள் மக்கள் பார்வைக்கு மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரிலுள்ள கடைகள் மற்றும் முக்கிய இடங்கள் அடைக்கப்பட்டன. மேலும், அங்கு சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை ரத்து செய்து அவசரமாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இத்துடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசலடைந்து வரும் நிலையில் தொடர்ந்து 5 வது நாளாக இரவில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதனால், அங்கு போர்ப் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

மே 29-ல் விண்வெளி மையத்துக்குச் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மே 29-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவ... மேலும் பார்க்க

மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என... மேலும் பார்க்க

ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரி... மேலும் பார்க்க