செய்திகள் :

``நீண்ட கால லிவ் இன் உறவில், ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூற முடியாது'' -சுப்ரீம் கோர்ட்

post image

சமீப காலமாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால் ஆண் நண்பர்கள் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்த ஒரு கல்லூரி பேராசிரியை இப்போது தன்னுடன் வாழ்ந்த வங்கி மேலாளர் திருமண ஆசை காட்டி தன்னுடன் பாலியல் உறவு வைத்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வங்கி மேலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ''இருவரும் நன்கு படித்தவர்கள். விருப்பத்தின் பேரில் இருவரும் உறவு வைத்துக்கொண்டுள்ளனர். இருவரும் வேறு வேறு நகரங்களில் பணியாற்றியபோது கூட ஒருவர் இடத்திற்கு மற்றொருவர் சென்றுள்ளனர். இருவரும் 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளனர். 16 ஆண்டுகளாக புகார்தாரர் மேல் முறையீட்டாளரின் கோரிக்கைக்கு இணங்கி இருக்கிறார். 16 ஆண்டுகளாக திருமண ஆசை காட்டி உறவு வைத்துக்கொண்டார் என்று கூறுவதை நம்பும் படியாக இல்லை. நீண்ட கால உறவில் இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

16 ஆண்டுகளாக இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்பதில் இருந்து அவர்களுக்கு இடையிலான உறவில் எந்த கட்டாயமோ அல்லது நிர்ப்பந்தமோ இருக்கவில்லை என்று முடிவு செய்யமுடிகிறது. திருமண வாக்குறுதியின் பேரில் மட்டுமே பாலியல் உறவுகள் தொடர்ந்ததாகக் கூறப்படும் இத்தகைய கூற்றுகள், நீண்ட கால உறவு காரணமாக குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையை இழக்கின்றன. திருமண வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த உறவில் நீண்ட காலம் இருக்கும் புகார்தாரரின் கூற்றை நம்பும்படியாக இல்லை. இருவரும் நீண்ட காலம் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டதாக ஒரு பெண் பாலியல் புகார் கூறமுடியாது.

தம்பதிகள் நீண்ட காலம் ஒன்றாக சேர்ந்து வாழும்போது ஆணுக்கு எதிராக பெண் பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது. இது போன்ற சூழ்நிலையில் பாலியல் உறவுகளுக்கு பின்னால் திருமண வாக்குறுதி மட்டும் காரணமாக இருந்தது என்பதை தீர்மானிப்பது கடினம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை’ - ஜப்தி உத்தரவுக்கு எதிராக ராம்குமார் பதில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்ப... மேலும் பார்க்க

`ஜகஜால கில்லாடி' படத்துக்காக கடன் : `சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு’ - உயர் நீதிமன்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

PM Modi: ``பட்டப்படிப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட முடியாது.." - நீதிமன்றத்தில் பல்கலைக் கழகம்!

பிரதமர் மோடியின் BA, MA பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பட்ட... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: `அனைத்து தரப்பினருக்கும் அனுமதி; அதேசமயம்...' - நீதிமன்றம் உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது . இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்த... மேலும் பார்க்க

ஈஷா:`மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா?’ - அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்

ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், வெள்ளியங்கிரி மலை அடிவ... மேலும் பார்க்க

Breath Analyzer: `மது பரிசோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் இனி செல்லாது' - பாட்னா உயர்நீதிமன்றம்

ப்ரீத் அனலைசர் மூலம் கிடைக்கும் தகவல் உறுதியான ஆதாரம் கிடையாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டு வதாலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால்... மேலும் பார்க்க