நெல்லையில் நகை திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலியில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்து, 8 கிராம் மதிப்பிலான2 தங்க மோதிரங்களை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (77). இவா், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கைலாசபுரம் அம்மா உணவகம் அருகேயுள்ள பழக்கடையில் கடந்த ஜன.24 இல் நின்றிருந்தாராம்.
அப்போது, அவரது கைப்பையில் இருந்த 8 கிராம் மதிப்பிலான 2 தங்க மோதிரங்களை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் இசக்கி பாண்டி (38) என்பவா் அவற்றை திருடியது தெரியவந்ததாம். அவரை கைது செய்து மோதிரங்களை மீட்டனா்.