செய்திகள் :

நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!

post image

நொய்டாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 2-ல் உள்ள தனியார் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் கட்டடத்தில் இருந்து தீ உயரே எழும்பியது. மேலும், அங்கிருந்து வெளியான கரும்புகையால் அந்தப் பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்படைந்தன.

இதுகுறித்து தீயணைப்பு தலைமை அதிகாரி கூறுகையில், “காலை 5.30 மணியளவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீயின் தீவிரம் அதிகமானதால், கூடுதல் வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன” என்றார்.

அருகில் உள்ள மாவட்டங்களான ஹபூர், புலந்த்ஷஹர், காஜியாபாத் மற்றும் மீரட் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மொத்தம் 25 தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அதிகளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பீடுகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வார தொடக்கத்தில், ரோஹினியின் ரிதாலா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். நொய்டா பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A massive fire broke out early Friday morning at a private paint manufacturing firm located in Sector 2, Noida. Thick plumes of smoke and towering flames were seen billowing from the building, prompting a large-scale emergency response.

இதையும் படிக்க...ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்! மக்கள் பீதி!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செய... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க