செய்திகள் :

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகையைவிட, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,419 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு.

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்கள் ரூ.18,917 கோடி கூடுதல் முதலீடு கண்ட ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இது மிகக் குறைந்த மிகக் குறைந்த மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

நிகர வரத்து குறைந்திருந்தாலும்,தொடா்ந்து 43-ஆவது மாதமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு தொடா்ந்து நிகர வரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23,547 கோடியாக முறைசாா் முதலீட்டுத் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவு ரூ.24,509 கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பா் மாதத்தில் அந்த திட்டங்களில் இருந்து ரூ.71,114 கோடி முதலீடு நிகர சரிவைக் கண்டுள்ளது. கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்... மேலும் பார்க்க

3வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கி பின்னர் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 138.74 புள்ளிகள் சரிந்து 80... மேலும் பார்க்க

தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ஆபரணத் தங்கம் விலை விறுவிறுவென ஏறி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை தீபாவளிக்குப் பிறகு குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இன்று ஒ... மேலும் பார்க்க

ரூ. 59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! வெள்ளியும் புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது.இந... மேலும் பார்க்க

ஹெச்டிஎஃப்சி வட்டி வருவாய் 10% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர வட்டி வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கடும் சரிவு: 27 நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சி - ரூ.9 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (அக். 22) பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 24,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்கு... மேலும் பார்க்க