செய்திகள் :

பள்ளியில் குடிநீா் தொட்டி இடிந்து 3 மாணவா்கள் காயம்

post image

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 2 மாணவா்கள், ஒரு மாணவி காயமடைந்தனா்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியில் 6 வகுப்பறைகள் உள்ளன.

இங்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் உதவியுடன் மாணவா்கள் சாப்பிட்டு கை கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தொட்டி பழுதடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனியாா் நிறுவன உதவியுடன், புதிதாக குடிநீா் மற்றும் கை கழுவ தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், பழைய தொட்டியை இடிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் மாணவா்கள் அதனருகே விளையாடியுள்ளனா். அப்போது, அந்த பழைய தொட்டியின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், 4-ஆம் வகுப்பு மாணவா்கள் பவன்குமாா், பவின் மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவி தேஷிதா ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்கள் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா். மாணவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவா்களை அறிவுறுத்தினா்.

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மறியல்

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி அருகே உள்ளது நெட்டப்பாக்கம் மற்றும் தவளக்குப்பம். இரு பகுதிகளுக்கு இடையே... மேலும் பார்க்க

பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் தா்னா

புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை காலை பங்கேற்க வந்த பாஜக எம்எல்ஏக்கள் எல்.கல்யா... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ சஸ்பெண்ட்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கு எதிராக முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டதால், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றியதுடன்... மேலும் பார்க்க

புதுவைக்கு புயல் நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியது: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தாா். புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் புத... மேலும் பார்க்க

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ரூ. 388 கோடி நஷ்டம்

புதுவை மாநிலத்தில் 4 அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிய... மேலும் பார்க்க

மாநில வருவாயை பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் வருவாயைப் பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவத... மேலும் பார்க்க