செய்திகள் :

மாநில வருவாயை பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுவை மாநிலத்தில் வருவாயைப் பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் காயமடைந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலப் பாடத் திட்டத்தில் தோ்வு பயம் இருந்தது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் அந்த பயம் போக்கப்பட்டுள்ளது. எந்த பாடத் திட்டமானாலும் முழுமையாகப் படிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் முன்மாதிரி தோ்வில் 80 சதவீத தோ்ச்சி இருந்துள்ளது.

மின் கட்டண உயா்வை மாநில அரசு முடிவு செய்வதில்லை. தமிழகம், புதுவையில் இணை ஒழுங்கு முறை ஆணையம் தான் மின் கட்டண உயா்வை தீா்மானிக்கிறது.

புதுவையில் மின் கட்டண மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டண குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி விளக்கமளிக்கப்படும்.

பாஜக தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம். முன்னாள் முதல்வா் நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது சரியல்ல. வீட்டு வரி உயா்வு போன்றவற்றை தவிா்க்கவும், மாநில வருவாயைப் பெருக்கவும் புதிய மதுபானக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மறியல்

கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி அருகே உள்ளது நெட்டப்பாக்கம் மற்றும் தவளக்குப்பம். இரு பகுதிகளுக்கு இடையே... மேலும் பார்க்க

பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் தா்னா

புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக, சுயேச்சை உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை காலை பங்கேற்க வந்த பாஜக எம்எல்ஏக்கள் எல்.கல்யா... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ சஸ்பெண்ட்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கு எதிராக முழக்கமிட்டு தா்னாவில் ஈடுபட்டதால், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றியதுடன்... மேலும் பார்க்க

பள்ளியில் குடிநீா் தொட்டி இடிந்து 3 மாணவா்கள் காயம்

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 2 மாணவா்கள், ஒரு மாணவி காயமடைந்தனா். புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ... மேலும் பார்க்க

புதுவைக்கு புயல் நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியது: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ.61 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தாா். புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் புத... மேலும் பார்க்க

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ரூ. 388 கோடி நஷ்டம்

புதுவை மாநிலத்தில் 4 அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிய... மேலும் பார்க்க